இணையதளத்தில் தங்கள் ஜாதகப் பலன்களை அறிய தங்கள் பெயர், பெற்றோர் பெயர், பிறந்த தேதி, நேரம், இடம் ஆகியவற்றை வாட்சாப்பில் (+91-98428 46104) அனுப்பவும்.

ஆவணி அவிட்டம்

ஆவணி அவிட்டம்

ஆவணி மாதத்தை சிங்க மாதம் என்றும் வேங்கை மாதம் என்றும் சித்தர்கள் பேசுவர். மாதங்களுக்கு எல்லாம் அரசன் என்று பொருள். ஆவணி மாதத்தில் சூரியன் சிம்ம வீட்டில் ஆட்சி செய்கிறார். சூரியனுக்கு சிம்ம வீடு பலமான வீடு. நமக்கு ஆத்ம பலத்தைத் தருபவர் சூரியனே. எனவே தான், ஆவணி மாதத்தில் விநாயகர் அவதாரம், கிருஷ்ணாவதாரம் ஆகியன நிகழ்ந்ததாகச் சொல்வர்.

-

சஞ்சலமாக இருந்த அர்ஜுனனுக்கு, ஆத்மபலத்தை அளிக்க கீதையை உபதேசம் செய்ய கிருஷ்ணர் இம்மாதம் பிறந்தார். மகாவிஷ்ணு என்ற நெடிய உயர்ந்த தெய்வம், வாமனன் என்ற குட்டையான வடிவு கொண்டு பூமியை தன் காலடியால் அளக்க அவதரித்தது இந்த ஆவணி மாத திருவோண நட்சத்திரத்தில் தான். காஞ்சி காமாட்சி ஆவணி மூல தீர்த்தத்தில் நீராடுவது மிகவும் புனிதமானது; மோட்ச கதியை தரவல்லது. இளையான்குடி மாறனார், குலச்சிறையார், செருத்துணை நாயனார், குங்கிலிய கலயனார், அதிபத்தர் நாயனார் ஆகிய நாயன்மார்கள் அவதரித்த மாதம் இந்த ஆவணி.

-

இந்த மாதத்தின் பெருமையை 

-

‘‘சிங்கத்திற்கிணை யொரு திங்களுமில்லை

சிவனினும் மேம்பட்ட தொரு இறையுமில்லை’’ -- -என்கின்றார் அகத்தியர்

 

ஆவணி மாதம் வரும் ஞாயிற்றுக்கிழமை விரதம் இருப்பது சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் ஞாயிறு என்றாலே சூரியன். அது மட்டுமின்றி, ஆவணி மாதத்தில் ஒவ்வொரு ஞாயிறு காலை 6-7 மணி வரை சூரிய ஹோரையே இருக்கும். ஆவணியில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஆன்மிக அறிவைப் புகட்டினால், அவர்கள் அதில் சிறந்து விளங்குவர். சிலருக்கு இயற்கையாகவே ஆன்மிக அறிவு அமையும். தேகநலனுக்காக சூரிய நமஸ்காரப் பயிற்சி எடுப்பவர்கள் ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் தொடங்குவது மிகவும் விசேஷம்.

-

தமிழகத்தில் ஆவணி மாதம் விவசாயத்திற்கு முக்கியமான காலமாகும். ஆடியில் விதைத்து, ஆவணியில் கண்போல பயிரை பாதுகாத்து வளர்கின்றனர் விவசாயிகள். கிராமப் புறங்களில் உள்ள தங்களது காவல் தெய்வத்திற்கு ஆனி, ஆடி மாதங்களில் படையல் முடித்து, கொடைவிழா நடத்தும் மக்கள், இம்மாதத்தில் தாங்கள் செய்யும் தொழிலுக்கு அங்கீகாரம் கிடைக்கும் என நம்புகிறார்கள்.

-

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் ஆவணி மூலத் திருவிழா பெரிய அளவில் கொண்டாடப்படுகிறது. கருங்குருவிக்கு உபதேசம் செய்தது, நாரைக்கு முக்தி கொடுத்தது, தருமிக்கு பொற்கிழி அளித்தது, புட்டுக்காக மண் சுமந்தது, நரிகளைப் பரிகளாக்கியது, வளையல் விற்ற லீலை... என, மதுரை மண்ணில் சிவபெருமான் நிகழ்த்திய திருவிளையாடல்கள் இந்த விழாவில் இடம்பெறும். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, சொக்கநாதருக்குப் பட்டாபிஷேகம் செய்யப்படும்.

-

|| ----------- திருச்சிற்றம்பலம் -----------

தொடர்புடைய பதிவுகள்

மறைக்கபட்ட உச்சிஷ்ட கணபதி மந்திரம்

மறைக்கபட்ட உச்சிஷ்ட கணபதி மந்திரம்

 

ஃ  ஒரு சொல் உச்சிஷ்ட கணபதி மந்திரம் ஓன்று உள்ளது.
ஃ  இது மறைக்கபட்டது ,வாமாச்சரம் மந்திரத்தின் ஒரு வகை.
ஃ  இதற்கு இயமம் நியமம் தேவை இல்லை.
ஃ  இந்த மந்திரத்தை எந்த நிலையிலும்  எல்லா நேரத்திலும் உச்சரிக்கலாம் இதனுடய பெருமை

சகல நன்மைகளைத் தரும் ஸ்ரீ சக்கரம்!

சகல நன்மைகளைத் தரும் ஸ்ரீ சக்கரம்!

சகல நன்மைகளைத் தரும் ஸ்ரீ சக்கரம்!
யந்திர ராஜாய வித்ம

உங்கள் ராசிக்கான ராசிக்கல்

உங்கள் ராசிக்கான ராசிக்கல்

உங்கள் ராசிக்கான ராசிக்கல் !

 ராசிக்கல் என்பது இன்றைய காலத்தில் பலரது நம்பிக்கையாகி வருகிறது. சரியான ராசிக்கல்லை நாம் அணிவதன் மூலம் வாழ்க்கையில் மாற்றங்கள் மட்டுமல்லது ஏற்றங்களும் உண்டாகும். 

ராசிக்கல் நமது உடலையும், மனதையும் நமது ராசி கிரகத்துக்கு ஏற்ப ஒருங்கிணைக்க வைத்து நமக்கு நன்மைகள் ஏற்படுத்துவதாக நம்பப்படுகிறது.

 ஆனால் ராசிக்கல்லை தேர்ந

FacebookInstagramYouTube